துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி 13.01.2010 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்த உரையினை நிகழ்த்த உள்ளார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tuesday, January 12, 2010
Subscribe to:
Posts (Atom)