Sunday, March 29, 2009

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை

சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை
தலைமையகம்
எண் 84 அங்கப்பன் தெரு
மண்ணடி
சென்னை 600 001

பேரவையின் கொள்கைக் கோட்பாடுகள்

* இறைத்தூதர்கள் , ஸஹாபா பெருமக்கள், இமாம்கள், இறைநேசர்கள் மற்றும் நபிகளின் குடும்பத்தினர் ஆகியோரை உள்ளன்புடன் கண்ணியப்படுத்தி அவர்களின் வழி நடப்பது

*ஹனஃபி, மாலிகி, ஷாஃபி, ஹன்பலி - இந்நான்கு மத்ஹபுகளையும் சரிநிகர் சமமாக மதிப்பதுடன் நம் இந்தியத் திருநாட்டிலுள்ள ஹனஃபி - ஷாஃபி இவ்விரண்டில் ஏதாவது ஒரு மத்ஹபில் தன்னை ஐக்கியப்படுத்தி அம்மத்ஹப் கூறும் சட்டங்களின்படி வாழ்வது.

*உண்மையான தரீக்காக்களை ஏற்றுக்கொண்டு காமிலான ஷைகிடம் பைஅத் பெற்ரு தெளிவான இறைஞானத்தைப் பெறுவது

*மவ்லித், ஜியாரத், மீலாத், பாத்திஹா, திக்ர் மஜ்லிஸ் மற்றும் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் அமைந்த உரூஸ் ஆகியவை நன்மை தரும் காரியங்கள் என்று மனமாற ஒப்புக்கொள்வது

*சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் செல்வதுதான் மறுமையில் வெற்றியைக் கொடுக்கும் என்று உறுதியாக நம்புவதுடன் இதற்கு முரண்பட்ட இயக்கங்களான வஹ்ஹாபியத், காதியானி, அஹ்லுல் குர் ஆன், ஜமாஅத்தே இஸ்லாமி மற்றும் தப்லீக் ஜமாஅத் ஆகியவற்றை மக்களுக்கு அடையாளம் காட்டி அவற்றின் கொள்கைகள் சரியானவை அல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

*மத - இன - ஜாதி - மொழி வேறுபாடின்றி வாழ்க்கையில் நலிந்த ஏழை எளியவர், அனாதைகள், விதவைகள், நோயாளிகள் , முதியோர்கள் மற்றும் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டடோர் அனைவருக்கும் மனிதநேயத்தோடு உதவி செய்வது.

*வரதட்சணை, குழந்தைத் தொழிலாளர் முறை, வட்டி மற்றும் போதை போன்ற சமூக சீர்கேடுகளை அகற்றி சமுதாய சீர்திருத்தம் செய்யப் பாடுபடுவது.

Thursday, March 19, 2009

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு







































துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு


http://www.muduvaivision.com/internews.asp?id=263

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் ’மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 18.03.2009 புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு மௌலீது நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலீது நிகழ்ச்சியில் தொண்டி மவ்லானா மவ்லவி முஸ்தபா ஹஜ்ரத், மவ்லவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி உள்ளிட்ட இமாம்கள்,கீழக்கரை, காயல்பட்டணம், தேரிழந்தூர், அதிராம்பட்டிணம், சிவகெங்கை, தோப்புத்துறை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் காயல்பட்டனம் மவ்லவி முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தீனிசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வண்ணம் பாடல் பாடினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.