துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாரந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை
மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
22.04.2009 புதன்கிழமை மாலை நடைபெறும் நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட
அரசு டவுண் காஜி முதுகுளத்தூர் மவ்லவி க. ஜலீல் சுல்தான் மன்பயீ
அவர்கள் 'உண்மையும் நன்மையும்' எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு
நிகழ்த்த இருக்கிறார்.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்.
Wednesday, April 22, 2009
Sunday, April 19, 2009
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி 15.04.2009 புதன்கிழமை இரவு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக காயல் ஆலிம் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஹ்ரூப் துவக்கவுரை நிகழ்த்தினார்.
சீறாப்புராணத்திலிருந்து பாடல்களை குமரி அபுபக்கர், தேரிழந்தூர் தாஜூத்தீன் ஆகியோர் பாடினர்.
அதனைத் தொடர்ந்து அன்புடன் அல்லாவுக்கு நூலாசிரியர் நாகர்கோவில் கவிஞர் ஷாகுல் ஹமீது உரை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியினர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Posts (Atom)