Sunday, April 19, 2009
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் மார்க்க விளக்க நிகழ்ச்சி 15.04.2009 புதன்கிழமை இரவு அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் துவக்கமாக காயல் ஆலிம் இறைவசனங்களை ஓதினார். நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது மஹ்ரூப் துவக்கவுரை நிகழ்த்தினார்.
சீறாப்புராணத்திலிருந்து பாடல்களை குமரி அபுபக்கர், தேரிழந்தூர் தாஜூத்தீன் ஆகியோர் பாடினர்.
அதனைத் தொடர்ந்து அன்புடன் அல்லாவுக்கு நூலாசிரியர் நாகர்கோவில் கவிஞர் ஷாகுல் ஹமீது உரை நிகழ்த்தினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதியினர் பங்கேற்றனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment