Thursday, March 19, 2009

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு







































துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மீலாதும் மௌலீதும் சிறப்புச் சொற்பொழிவு


http://www.muduvaivision.com/internews.asp?id=263

துபாயில் சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் ’மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி 18.03.2009 புதன்கிழமை மாலை நடைபெற்றது.

மஹ்ரிப் தொழுகைக்குப் பின்னர் சிறப்பு மௌலீது நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலீது நிகழ்ச்சியில் தொண்டி மவ்லானா மவ்லவி முஸ்தபா ஹஜ்ரத், மவ்லவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி உள்ளிட்ட இமாம்கள்,கீழக்கரை, காயல்பட்டணம், தேரிழந்தூர், அதிராம்பட்டிணம், சிவகெங்கை, தோப்புத்துறை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மீலாதும் மௌலீதும்’ எனும் தலைப்பில் காயல்பட்டனம் மவ்லவி முஹம்மது சுலைமான் ஆலிம் மஹ்ளரி சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். கீழக்கரை முஹம்மது மஹ்ரூப் தலைமையிலான குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

தீனிசை வேந்தர் தேரிழந்தூர் தாஜுத்தீன் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை விளக்கும் வண்ணம் பாடல் பாடினார்.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

No comments: