பெருநாள் யாருக்கு?
எவன் உண்ணவும் பருகவும் மாத்திரம் செய்தானோ அவனுக்கு உண்மையான பெருநாளில்லை. (அதாவது) ரமலான் மாதத்தில் நோக்காமலும் நல்ல காரியங்களை செய்யாமலும் இருந்துவிட்டு பெருநாளன்று எவன் அல்லாஹ்வுக்காக நன்மையான காரியங்களைத் தரிகரண சுத்தியுடன் அதாவது மனம்மொழி மெய்களின் சுத்தியுடன் செய்தானோ அவனுக்குதான் உண்மையான பெருநாள்.
புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்வோருக்கு ஈது பெருநாளில்லை (அதாவது வருஷமெல்லாம் அஞ்சிப்பேணாமல் இருந்துவிட்டு, பெருநாளன்று நல்ல வஸ்திரங்களை மட்டும் வாங்கிக் கொள்வது உண்மையான பெருநாளாகமாட்டாது) எனினும் அல்லாஹ{த்தஆலாவால் அச்சமூட்டி அறிவிக்கப்பட்டவைகளை அஞ்சிப்பேணி நடநடதவர்களுக்கே ஈதுப்பெருநாள் உண்டு. (ரமலான் மாதத்தில் நோன்பு நோற்காமலும் தௌபா, இஸ்திக்பார் செய்யாமலும் இருந்து விட்டு) பெருநாளன்று மாத்திரம் தன் வீட்டில் (வாசனைக்காக) ஊதுபத்pகளை கொளுத்துபவர்களுக்கு பெருநாளில்லை ஆனால், எவன் தௌபாச் செய்து, அதிலிருந்து பாவம் புரியாமலிருந்தானோ அவனுக்குத்தான் உண்மையான பெருநாள். ஈது (நாளன்று மாத்திரம்) உணவுகளை தயார் செய்து அளிப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால், (அதற்கு முந்திய ரமலான் மாதத்தில்) தன்னாலியன்றவரை நன்மைபுரிய முயன்றவர்களுக்குத்தான் உண்மையான பெருநாளாகும்.
உலக அலங்காரங்களைக் கொன்டு அன்றைய தினம் தங்களை அலங்கரித்து கொள்பவர்களுக்கு ஈதுப்பெருநாள் இல்லை. ஆனால் தக்வாவுள்ளவர்களுக்கே உண்மையான பெருநாள். (பெருநாளன்று ஈதுவுக்குச் செல்ல) வாகனங்களின் மீது ஏறுபவர்களுக்கு உண்மையான ஈதுப் பெருநாளில்லை ஆனால், தங்களுடைய குற்றச் செயல்களை தவிர்ப்பவர்களுக்கே உண்மையான பெருநாளாகும்
பெருநாளன்று ஈதுகாவில் நேர்த்தியான விரிப்புகளை விரித்துக் கொன்டிருப்பவர்களுக்கு உண்மையான பெருநாளில்லை. ஆனால் ஸிராத் என்னும் பாலத்தை மறுமையில் கடக்க எவன் முயலுகிறானோ அவனுக்கே உண்மையான பெருநாளாகும்.
Saturday, July 3, 2010
Monday, June 21, 2010
உறவினர்களை நேசித்தல்
18.06.2010 வெள்ளிக்கிழமை அன்று துபாய் பள்ளிகளில் ஜும் ஆ தொழுகையின் போது நிகழ்த்தப்பட்ட குத்பா உரையின் தமிழாக்கம்
தமிழாக்கம் :
மௌலவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் லெப்பை மஹ்ளரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம்
துபாய்
050 20 19 105
உறவினர்களை நேசித்தல்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் …
ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்
ஜும்ஆ பிறை 6 ரஜப் 1431 ( தேதி: 18- Jun- 2010 )
"உறவினர்களை நேசித்தல்"
முதல் குத்பா
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !
இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )
"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன்இ கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)
அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).
தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).
அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).
உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும்இ உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)
உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாகஇ அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால்இ நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள்இ சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள்இ விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள்இ எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)
இரண்டாவது குத்பா
அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இந்த ஐக்கிய அரபு அமீரகம் உங்களுக்கு கட்டளையிடுகிறது. இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாகஇ அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!
தகவல்: அவ்காஃப் - U.A.E.
( மொழியாக்கம்: காயல் சுலைமான் ஆலிம்
இமாம் ETA Ascon & Star Group - Dubai )
தமிழாக்கம் :
மௌலவி காயல் முஹம்மது சுலைமான் ஆலிம் லெப்பை மஹ்ளரி
இமாம், ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழுமம்
துபாய்
050 20 19 105
உறவினர்களை நேசித்தல்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம் …
ஐக்கிய அரபு அமீரகம் - துபாய்
ஜும்ஆ பிறை 6 ரஜப் 1431 ( தேதி: 18- Jun- 2010 )
"உறவினர்களை நேசித்தல்"
முதல் குத்பா
உறவைப் பேணுகிற விசயத்தில் சேர்ந்து வாழ வேண்டும் என்று கடமையாக்கியும் ஸலாமத்துடன் சுவனம் செல்லும் வழியை ஏற்படுத்திய அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகுக !
இதைக் கருத்தில் கொண்டு அருள்மரையில் அல்லாஹ் சொல்கிறான் "மேலும் அவர்கள் எத்தகையோர் என்றால், எதை சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டானோ, அந்த இரத்த சொந்தத்தையையும் சேர்த்துக் கொள்வார்கள் (அதைத் துண்டித்து விடும் விஷயத்தில் தங்கள் இரட்சகனுக்கு பயந்தும் நடப்பார்கள். கேள்வி கணக்குகளின் கடுமைகளையும் பயந்து கொள்வார்கள்" ( 13:21 )
"மேலும் இரத்தக் கலப்பு சொந்தங்களையும் துண்டித்து விடுவதையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள்" ( 4:1 ) முஸ்லீம்களே! நிச்சயமாக உறவினர்களைப் பேணுவதில் மகத்துவமும் மாபெரும் கண்ணியமும் இருக்கும் நிலையில் உறவினர்களை நேசிக்கும் விதிகளில் அதிகமான கடமைகள் உள்ளன. ஏனென்றால், நிச்சயமாக ரஹ்மான் & ரஹீம் என்ற வார்த்தையிலிருந்து அல்லாஹ்வின் பெயராக உருவாக்கப்பட்டுள்ளது.
இன்னும் அவர்களுடன் மென்மையாகவும் பாசத்துடனும் இரக்கத்துடனும் நல்ல உபகாரத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பதுடன்இ கட்டாய கடமையாக்கியதுடன் அதிகமான பரக்கத்துகளும் வெற்றியும் ஈடேற்றமும் முழு நன்மையை பெற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பு இந்த உறவினர்களுடன் சேர்ந்து வாழும் அடியானுக்கு இறைவன் ஏற்படுத்துகிறான். எனவே, இவ்வாறு கடமையாக்கிய இறைவன் உறவினர்களை நேசிப்பது என்பது சொந்தக்காரர்கள், அதாவது சகோதர சகோதரிகள் மூலமாக, தாய் தந்தை வழி சொந்தங்கள், திருமண சொந்தம், மாமா மற்றும் மாமிமார்கள் சிறிய தகப்பனார் மற்றும் சாச்சிகள் கோத்திரத்தார்கள் மற்றும் குடும்பத்தார்கள் இவர்களை நேரில் சந்தித்து முக மலர்ச்சியோடு ஸலாம் உரைப்பதிலும் பொருள் உதவி செய்வதிலும் உபதேசிப்பதிலும் ஆலோசனை கூறும் விசயத்திலும் நல்ல வார்த்தைகளைப் பேசுவதிலும் இன்ப துன்பங்களில் பங்கெடுப்பதிலும் மனக்கசடுகளைக் கலைவதிலும் இது போன்றவற்றில் ஈடுபடுவதில் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
உங்களை துண்டித்து நடந்தாலும் நீங்கள் அவர்களுடன் இணக்கமாக நடப்பதில்தான் வெற்றியும் உள்ளது. இதை வலியுறுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய கூற்று சான்றாக அமைகிறது. இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் "பதிலுக்குப் பதில் உறவாடுகிறவர் (உண்மையில்) உறவைப் பேணுகிறவர் அல்லர். மாறாக உறவு முறிந்தாலும்இ அந்த உறவுடன் இணைகிறவரே உறவைப் பேணுபவராவர். (நூல்: புகாரி 5988)
அல்லாஹ்வின் ரஹ்மத்தும் பரக்கத்தும் இறங்குவதற்கு காரணமாகவே உறவைப் பேணுவதின் நோக்கமாகும். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை உறவுகளைப் பேணக் கூடியவர்களாக உருவாக்க வேண்டும். நாம் உறவினர்களை சந்திப்பதற்கும் விசாரிப்பதற்கும் ஓர் அரணாகத் திகழ வேண்டும். தங்களுடைய கோத்திரங்களைப் பற்றியும் குடும்பத்தார்களின் விபரங்களையும் நமது தலைமுறையினர்களையும் அவர்களுக்கு (பிள்ளைகளுக்கு) தெரியப்படுத்த வேண்டும். இதற்கு முன் மாதிரியாகவே பெற்றோர்கள் திகழ வேண்டும். இதை உணர்த்தும் நபி (ஸல்) அவர்களின் கூற்று 'எந்த ஒன்றை உங்கள் உறவினர்களாக கருதுகிறீர்களோ அந்த குடும்பத்தார்களைப் பற்றியும் உறவினர்களையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்' இந்த நபி மொழிக்கு இமாம் திர்மிதி (ரஹ்) அவர்கள் விளக்கம் சொல்லுகிறார்கள். தம் வாழ்வாதாரம் (ரிஜ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு அளிக்குமோ அவர் தம் உறவைப் பேணி வாழட்டும் (நூல்: புஹாரி 5985).
தம்பதியர்கள் தங்கள் சொந்தங்களில் பேணுதலாகவும் அவரவர் பெற்றோர்களை கண்ணியப்படுத்தக் கூடியவர்களுக்கு தங்களது ஆயுள்களிலும் பொருட்களிலும் எல்லா வகையான நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக இந்த உறவு நேசிப்பதில்தான் திகழ்கிறது. அதுபோல நண்பர்கள் தங்களுக்குள் நட்பை வளர்ப்பதும் ஒருவருக்கொருவர் உபதேசிப்பதிலும் பொறுமையை கடைப்பிடிப்பதிலும் உறவுகளைப் பேணும் விசயத்தில் முழு ஆர்வம் கொள்வது அவசியமாகும். இந்த உறவை நிலைப் படுத்தும் நபி மொழிகளில் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம். ஸலாமை பரப்புங்கள் உணவுகளை உண்ணக் கொடுங்கள் உறவைப் பேணுங்கள் மக்கள் தூங்கும் (இரவில்) நிலையில் தொழுது கொள்ளுங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் நிம்மதியாக சுவர்க்கம் செல்வதற்கு வாய்ப்பாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: முஸ்னத் அஹ்மத் 22668).
அபு அய்யூபுல் அன்சாரி அவர்கள் கூறியதாவது 'ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் "இறைத்தூதர் அவர்களே! என்னை சுவர்க்கத்தில் சேர்க்கும் ஒரு நற் செயலை எனக்கு கூறுங்கள்" என்று அவசரமாக கேட்டார். அப்போது மக்கள் "இவருக்கு என்ன நேர்ந்தது? இவருக்கு என்ன நேர்ந்தது?" என்று கேட்டார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்" என்று மக்களை நோக்கி சொல்லிவிட்டு அந்த மனிதரை நோக்கி "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது. (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்" என்று கூறிவிட்டு "உம்முடைய வாகனத்தை (உம்முடைய வீடு நோக்கி) செலுத்துவீராக!" என்று கூறினார்கள். அம் மனிதர் (அப்போது) தன் வாகனத்தில் அமர்ந்தார் (நூல்: புஹாரி 5983).
உறவை முறிக்கும் பாவத்திற்க்காக தண்டனை என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "உறவை முறித்து வாழ்பவன் சுவர்க்கத்தில் நுழைய மாட்டான்" என ஜுபைர் இப்நுமுத்யிம் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5984).
அல்லாஹ் படைப்பினங்களைப் படைத்து முடித்த போது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக்கொண்டு) உறவுகளை துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரியே இப்படி நிற்கிறேன். என்று கூறிய(மன்றாடிய)து. அல்லாஹ் "ஆம்! உன்னை (உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும்இ உன்னை துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்கு திருப்தியளிக்கவில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு "ஆம் (திருப்தியே) என் இறைவா" என்று கூறியது. அல்லாஹ் "இது உனக்காக நடக்கும்" என்று சொன்னான். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் விரும்பினால் (நயவஞ்சகர்களே) நீங்கள் (போருக்கு வராமல்) பின் வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்து விடவும் முனைகிறீர்களா? எனும் திருக் குர்ஆன் (47:22)-வது வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள் என அபுஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரி 5987)
உறவு ரஹீம் என்பது அளவில்லா அருளாளன் (ரஹ்மான்) இடமிருந்து வந்த (அருட்கொடை) கிளையாகும். எனவே இறைவன் (உறவை நோக்கி) உன்னோடு ஒட்டி வாழ்பவனுடன் நானும் உறவு பாராட்டுகிறேன். உன்னை முறித்துக் கொள்பவனை நானும் முறித்துக் கொள்வேன்" என்று கூறினான் என அபு ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் (நூல்: புஹாரி 5988).
நபி (ஸல்) அவர்களுக்கு வஹியின் தாக்கத்தின் காரணமாக அன்னை கதீஜா நாயகி (ரலி) அவர்கள் ஆறுதல் சொல்லும்போது "அல்லாஹ்வின் ஆணையாகஇ அல்லாஹ் உங்களை கை விடவே மாட்டான். ஏனென்றால்இ நீங்கள் உறவினர்களை நேசிக்கிறீர்கள்இ சிரமத்தை சுமந்து கொள்கிறீர்கள்இ விருந்தாளிகளை உபசரிக்கிறீர்கள்இ எளியவர்களுக்கு உதவுகிறீர்கள்' என்று அன்னை கதீஜா நாயகி (ரலி) வாழ்த்தினார்கள் (நூல்: புஹாரி 3)
இரண்டாவது குத்பா
அடியார்களே! மேலே சொல்லப்பட்ட கருத்துக்கள் அனைத்திலும் ஒவ்வொரு மனிதனும் சொந்த பந்தங்களை (உறவை) பேணும் விசயத்தில் கவனமாகத் திகழ வேண்டும் என்றும்இ நோயாளிகளை சந்திப்பதிலும் ஒருவருக்கொருவர் உதவியாக வாழ வேண்டும் என்பதையும் இந்த ஐக்கிய அரபு அமீரகம் உங்களுக்கு கட்டளையிடுகிறது. இதை உணர்த்தும் வசனமாக அல்லாஹ் அருள்மறையில் சொல்கிறான் "இன்னும் நன்மையிலும் பயபக்தியிலும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்ளுங்கள்" (5:2)
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோரையும் நம் சொந்த பந்தங்களை நேசிக்கக் கூடியவர்களாகஇ அல்லாஹூம் அவனுடைய திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கட்டுப்பட்டவர்களாக ஆக்கித் தந்தருள்வானாக! ஆமீன்!!
தகவல்: அவ்காஃப் - U.A.E.
( மொழியாக்கம்: காயல் சுலைமான் ஆலிம்
இமாம் ETA Ascon & Star Group - Dubai )
Tuesday, January 12, 2010
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவை நடத்தும் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி 13.01.2010 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்த உரையினை நிகழ்த்த உள்ளார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் பேரவையின் சார்பில் வாராந்திர இஸ்லாமிய சொற்பொழிவு நிகழ்ச்சி 13.01.2010 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் 8.30 மணியளவில் அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் தமிழக அரசின் ஓய்வு பெற்ற பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் முதுகுளத்தூர் எம்.எஸ். நெய்னா முஹம்மது அவர்கள் தமிழக முஸ்லிம்களின் கல்வி நிலை குறித்த உரையினை நிகழ்த்த உள்ளார்கள்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Labels:
சுன்னத் வல் ஜமாஅத் பேரவை,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி
Sunday, August 30, 2009
துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
Tamil Islamic Audio
dateSun, Aug 30, 2009 at 2:17 PM
subjectRe: துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
http://www.tamilislamicaudio.com/events_tafseer_200_week.asp?lang=ln1
Tamil Islamic Audio
dateSun, Aug 30, 2009 at 2:17 PM
subjectRe: துபாய் கோட்டைப் பள்ளியில் ரமலான் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற்றது. அவ்விழாவில் ஆற்றப்பட்ட உரைகள்.
http://www.tamilislamicaudio.com/events_tafseer_200_week.asp?lang=ln1
Labels:
கோட்டைப் பள்ளி,
சொற்பொழிவு,
துபாய்,
நிகழ்ச்சி,
ரமலான்
Tuesday, August 25, 2009
துபாயில் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு
துபாயில் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு
http://www.mudukulathur.com/index.asp
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0827-holy-quran-conference-in-dubai.html
துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற இருக்கிறது.
துபாய் செம்பி இன்டர்நேஷனல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹம்மது யாசின் தலைமை வகிக்கிறார். சங்கீதா உணவக பங்குதாரர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வரவேற்புரி நிகழ்த்துகிறார்.
200 வார தஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இயக்குநர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை ஈடிஏ அஸ்கான் இயக்குநர் செய்யது எம். ஹமீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அரேபியா டாக்ஸி இயக்குநர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாஹ், பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி அரபித்துறை பேராசிரியர் கவிஞர் எம். ஷரபுத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, ஆவூர் தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் மன்பயீ உள்ளிட்டோ ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன், அடமங்குடி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய கீதம் பாடுவர். வின்னர் குரூப் நிர்வாக இயக்குநர் டி.ஏ. அப்துல் கபூர் காகா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும் விபரங்களுக்கு : 050 - 4255 256
மின்னஞ்சல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com
http://www.mudukulathur.com/index.asp
http://thatstamil.oneindia.in/art-culture/essays/2009/0827-holy-quran-conference-in-dubai.html
துபாய் : துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை மற்றும் ஜமாஅத்துல் உலமா சபை ஆகியவை இணைந்து 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு மற்றும் திருக்குர்ஆன் விளக்கவுரை 200 வது வார நெகிழ்வு விழா ஹிஜ்ரி 1430 ரமலான் 7 ( 27 ஆகஸ்ட் 2009 ) வியாழன் மாலை தராவிஹ் தொழுகையைத் தொடர்ந்து துபாய் சிறிய ஜர்வூனி ( கோட்டை ) பள்ளியில் நடைபெற இருக்கிறது.
துபாய் செம்பி இன்டர்நேஷனல் குரூப்பின் கே.எஸ்.எம். முஹம்மது யாசின் தலைமை வகிக்கிறார். சங்கீதா உணவக பங்குதாரர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் வரவேற்புரி நிகழ்த்துகிறார்.
200 வார தஃப்ஸீர் டிவிடியினை ஈடிஏ அஸ்கான் நிதித்துறை இயக்குநர் பி.எஸ்.ஏ. ஆரிஃப் ரஹ்மான் வெளியிட முதல் பிரதியினை ஈடிஏ அஸ்கான் இயக்குநர் செய்யது எம். ஹமீது ஸலாஹுத்தீன் பெற்றுக்கொள்கிறார்.
வேலூர் நாடாளுமன்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், அரேபியா டாக்ஸி இயக்குநர் பி.எஸ்.எம். ஹபீபுல்லாஹ், பாபநாசம் ஆர்.டி.பி. கல்லூரி அரபித்துறை பேராசிரியர் கவிஞர் எம். ஷரபுத்தீன் ஆலிம் மிஸ்பாஹி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
மவ்லவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி, ஆவூர் தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லானா அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் மன்பயீ உள்ளிட்டோ ஏற்புரை நிகழ்த்துகின்றனர்.
தேரிழந்தூர் தாஜுத்தீன், அடமங்குடி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இஸ்லாமிய கீதம் பாடுவர். வின்னர் குரூப் நிர்வாக இயக்குநர் டி.ஏ. அப்துல் கபூர் காகா நன்றியுரை நிகழ்த்துகிறார்.
மேலும் விபரங்களுக்கு : 050 - 4255 256
மின்னஞ்சல் : ahmed muhammad mahroof mahroof1958@yahoo.com
Wednesday, August 12, 2009
துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு
துபாயில் ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் அவர்களின் மார்க்க சொற்பொழிவு
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செங்கோட்டை சிங்கம், மணிமொழி மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ஃபாஜில் மன்ப ஈ ஆலிம் அவர்கள் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கணவன் மற்றும் மனைவிக்குரிய கடமைகள், குழந்தை வளர்ப்பு, சமுதாயப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்பட்ட உரை தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் ( www.tamilislamicaudio.com ) தளத்தில் வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உஃபூர் காக்கா, காயல் சுலைமான் ஆலிம், தாவூத் அலி ஹஜ்ரத், பிலாலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் உதவி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
துபாய் : துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்று வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செங்கோட்டை சிங்கம், மணிமொழி மவ்லானா ஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஆலிம் ஃபாஜில் மன்ப ஈ ஆலிம் அவர்கள் பேருரை நிகழ்த்தினார்.
அவர் தனது உரையில் கணவன் மற்றும் மனைவிக்குரிய கடமைகள், குழந்தை வளர்ப்பு, சமுதாயப் பெண்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் உள்ளிட்டவை குறித்து விவரித்தார்.
நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு ஜமாஅத்துகளைச் சேர்ந்த பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். பெண்களுக்கு தனியிட வசதியும், இரவு உணவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் பதிவுசெய்யப்பட்ட உரை தமிழ் இஸ்லாமிக் ஆடியோ.காம் ( www.tamilislamicaudio.com ) தளத்தில் வெளியிடப்படும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முஹம்மது மஹ்ரூப், உஃபூர் காக்கா, காயல் சுலைமான் ஆலிம், தாவூத் அலி ஹஜ்ரத், பிலாலி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
தகவல் உதவி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
Labels:
அப்துஷ் ஷுக்கூர்,
ஆலிம்,
ஆவூர்,
சொற்பொழிவு,
துபாய்,
மார்க்கம்
துபாயில் மவ்லவி அப்துஸ் ஸுக்கூர் ஹஜ்ரத் சொற்பொழிவு
துபாயில் மவ்லவி அப்துஸ் ஸுக்கூர் ஹஜ்ரத் சொற்பொழிவு
துபாய் :
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடத்தப்பட்டு வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வில் மணிமொழி மௌலானா, செங்கோட்டை சிங்கம் மவ்லவி அல்ஹாஜ் ஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் மன்ப ஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
துபாய் :
துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி வாரந்தோறும் புதன்கிழமை மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடத்தப்பட்டு வருகிறது.
12.08.2009 புதன்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் நடைபெறும் நிகழ்வில் மணிமொழி மௌலானா, செங்கோட்டை சிங்கம் மவ்லவி அல்ஹாஜ் ஆவூர் அப்துஸ் சுக்கூர் ஆலிம் மன்ப ஈ அவர்கள் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த உள்ளனர்.
பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Labels:
சொற்பொழிவு,
துபாய்,
மவ்லவி அப்துஸ் ஸுக்கூர்,
ஹஜ்ரத்
Subscribe to:
Posts (Atom)
